Tuesday 24 January 2017

நீட்சேவின் வாசகர்கள்




வாசகர்கள் இருவர் சந்தித்துக் கொண்டார்கள்
தங்களின்  படைப்பாளிகளைப் பட்டியல்யிட்டனர்
ஒத்த குரலில் நீட்சே... என்றனர்
கண்கள் விரிய கைகுலுக்கிக் கொண்டனர்
நீட்சேவின் வாசகர்கள் என்றால்
தியான குருக்களைப் பின்பற்றி இருக்க வேண்டும் தானே
இருவரும் தாங்கள் குருக்களின் பெயர்களுடன்
காலளவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
நான் நான்கரை ஆண்டுப் பின்பற்றிய தியான முறையை
நீங்கள் ஏன் இரண்டே நாளில் விட்டீர்கள்?
சொல்லிக் கொடுத்தவரை எனக்குப் பிடிக்கவில்லை.
ஓ...
நீங்கள் ஏன் நாலரை வருடம் பின்பற்றியதை விட்டீர்கள்?
மகத்தான என்குருவுடன் நடந்த மகத்தான தியான கூட்டத்தில்
குருவுக்கு வெள்ளிக் குவளையில் தண்ணீர் கொடுக்கப்பட்டது.
ம்...
பக்கத்தில் கோப்பிக் குடித்துக்கொண்டிருந்த
நண்பர் கலவரம் அடைந்தார்.
வாசகர்களுக்குத் தேடல் இயல்புதானே...



No comments:

Post a Comment