கண்களில் அடிக்கடி மின்னல் வெட்டும்
அவர் அவதானிப்புகள் பிரமிப்பூட்டும்
சில நொடிகளுக்குள் தன்னைக் கரைத்துக் கொள்வார்
சில நொடிகளுக்காக எதையும் இழப்பார்
கவிதைக்கு முன் அபுனைவு ஒன்றும் இல்லையென்பார்
கட்டுரைக்கு முன் புனைவு கைகட்ட வேண்டும் என்பார்
கதைகளுக்கு முன் அத்தனை இலக்கியமும் வீண் என்பார்
தேடித் தேடிப் படித்து நொடி நொடியாய் மாய்ந்து
போகும்
இவரை என்ன சொல்வது
No comments:
Post a Comment