Wednesday 25 January 2017

இந்திர மலை


குஞ்சு மீன் 
தன் சின்ன சிறையில்
மலையை உண்டு  உயிர்வளர்த்து.
எவ்விக் குதித்து மலையை
முத்தமிட்டு முத்தமிட்டு
காற்றின் மென்திரையை கிழித்தது
நீரில் வீழ்தபின்னும்

மலையை கண்களில் வளத்த மீன்
சிறுகற்கள் கொண்டு
சிறுக சிறுக மலை வளர்த்து 
கனவு கொண்டு நீலம் சேர்த்து
காமம் சேர்த்து காடு வளர்த்து
வேங்கை முகர்ந்து மோச்சம் பெற்றது 
அருந்ததியாய்.

No comments:

Post a Comment