என் காயங்களுக்கு காரணமான
அவன் அம்புகளை நான் சேகரிக்கிறேன்.
அவன் அம்புகளை நான் சேகரிக்கிறேன்.
வீட்டு சுவரில் படங்களாகவும்,
திரைச்சீலைகளை வசிகரபடுத்தும் தையல்களாகவும்,
என் சேலைக் கரையின் தொங்கல்களாகவும்,
உதட்டு சாயமாகவும்
உள்ளாடை சித்திரங்களாகவும்
கவிதையாய் பாதுகாக்கிறேன்
வியுகமாய் சுழலும் அவற்றின்
ஆயுள் எண்ணி வருந்துகிறேன்.
மயிலிறகுகள் நிறைந்திருக்கும் - என்
அம்பாராத்தூணியில் எப்போதும்
அம்புகளுக்கு இடமில்லை.
சொற்களை போலவே அம்புகளையும்
நான் இழக்க விரும்பவில்லை
நிராயுதபாணியாய் அம்புகளை
எதிர் கொள்ள ஒருபோதும் வெட்கமில்லை!
No comments:
Post a Comment