பட்டுச்சிறகு விரித்துப் பறந்த
வண்ணத்துப்பூச்சி பிடித்து
பிஞ்சுப்போன அதன் சிறகுக்காய்
அழுது
பால் வடியும் பிஞ்சு மாங்காய்
பறித்து
வரப்போரம் நடைபழகிச் சறுக்கி
விழுந்து
பூவரசம் பூப்பறித்து கூட்டுவைத்து
சிறுகற்களில் பொரியல் செய்து
கள்ளன் போலிஸ் விளையாடி
புழுதியில் கட்டிப்புரண்டதெல்லாம்
நம் பிள்ளைகளுக்கு இல்லை
இன்னும் நாற்பது ஆண்டில்
பூகோளம் நீர்க்கோளமாம்
ஆதங்கப்பட்டேன் தோழியிடம்
அவள் சொன்னாள்
கவலைப்படாதே
எல்லோருக்கும் நீச்சல்
கற்றுக்கொடுப்போம் என்று.
No comments:
Post a Comment