Wednesday 25 January 2017

அது மட்டும் போதும்


என் டைரியின் பக்கங்கள் கூடப்
பொய்களாலேயே நிரப்பப் படுகின்றன
ஒருவரை ஒருவர் ஆளுமை செய்ய
நித்தமும் பல நாடகங்களின் அரங்கேற்றம்
பொய்கள் கொட்டிய புழுவும்
உண்மையான குள()வியாய்
வண்ணக் கலவைகளில் வேடமிட்டு
வேடங்களாய் நான்

குயிலுக்கு மறுமொழி கூறத் துணிவேதும் தேவையில்லை
அவர் சிரிப்பார் இவர் பார்ப்பார் எனும் நிலை உதிர்த்து
அப்பாவின் தோள் அமர்ந்து ஊர் சுற்றும் பெருமிதத்திற்கும்
தூண்களின் வரிசை நடுவே வளைந்து ஓடும் குதூகலத்திற்கும்
ஆளில்லா வீதியிலே பாட்டுப்பாடும் மகிழொலிக்கும்
வெள்ளந்தி சிரிப்புக்கும் வினையில்லா பேச்சுக்கும்
உண்மைக்கும் உணர்வுக்கும் ஒரு நாள் உண்டெனில்
அது மட்டும் போதும்.


No comments:

Post a Comment