Wednesday 25 January 2017

வானத்தின் இரு கண்கள் வழி



என் கடந்த காலத்தை ஒரு கோட்டை போல் கழட்டி எறிகிறேன்.
எத்தனை முறை உரித்து எறிந்தாலும்
ஏதோ ஒரு புள்ளியில் தோற்றுப்போகிறேன்.
அழிக்க முடியாத உரித்தெறிந்த கடந்த கால
பிம்பத்தைக் கண்ணாடி குவளைகளில் அடைத்துக் கண்காணிக்கிறேன்.
ஒவ்வொரு பிம்பத்தையும் பிரத்யேக முறையில் - என்
கைப் பாவைகளாக்கிக் கர்வம் கொள்கிறேன்.
வேலியிடப்பட்ட என் அகந்தையின்
அடையாளங்கள் அவை.
ஏதோவொன்றை மீட்டுருவாக்க எவற்றை எல்லாமோ செய்யும் முயற்சியில்
நிகழ்காலம் நீராய்க் கரைந்து என் கால் நழுவி ஓடுகிறது.

No comments:

Post a Comment