என்
கடந்த காலத்தை ஒரு கோட்டை போல் கழட்டி எறிகிறேன்.
எத்தனை
முறை உரித்து எறிந்தாலும்
ஏதோ
ஒரு புள்ளியில் தோற்றுப்போகிறேன்.
அழிக்க
முடியாத உரித்தெறிந்த கடந்த கால
பிம்பத்தைக்
கண்ணாடி குவளைகளில் அடைத்துக் கண்காணிக்கிறேன்.
ஒவ்வொரு
பிம்பத்தையும் பிரத்யேக முறையில் - என்
கைப்
பாவைகளாக்கிக் கர்வம் கொள்கிறேன்.
வேலியிடப்பட்ட
என் அகந்தையின்
அடையாளங்கள்
அவை.
ஏதோவொன்றை
மீட்டுருவாக்க எவற்றை எல்லாமோ செய்யும் முயற்சியில்
நிகழ்காலம்
நீராய்க் கரைந்து என் கால் நழுவி ஓடுகிறது.
No comments:
Post a Comment