Wednesday 25 January 2017

அது மட்டும் வேண்டாம்


புரையோடிய பொய்களும்
செல்லரிக்கும் சுயநலமும்
பல்லிளிக்கும் பாசாங்கும்
குடிகெடுக்கும் பணவெறியும்

எரிபரக்கும் ஆணவமும்
திறந்தவெளிச் சிறையில் மனிதனை
அடைக்கும் காட்டுமிராண்டித்தனமும்
பிறர் உயிர் பறிக்கும் தினவிய திமிரும்

இரத்தமில்லா உயிர்க்கொலையும்
எமக்கென்ன எனும் மெத்தனமும்
இத்தனையும் உள்ளடக்கிப் பரிணாம வளர்ச்சி பெற்று
சிங்கப்பல் இரண்டு முளைக்காத குறையாய்

கொத்து கொத்தாய் மனிதர்களைக் கொன்று குவித்து
வித விதமாய்க் கிருமிகளை உலவ விட்டு
எச்சில் பருக்கைகள் எனச் சிதறடிக்கப் பட்ட
மனிதநேயத்தைக் கொன்று விட- இன்னும்
ஒரு காலம் வரும் என்றால்

அது மட்டும் வேண்டாம் 

No comments:

Post a Comment