புரையோடிய பொய்களும்
செல்லரிக்கும் சுயநலமும்
பல்லிளிக்கும் பாசாங்கும்
குடிகெடுக்கும் பணவெறியும்
எரிபரக்கும் ஆணவமும்
திறந்தவெளிச் சிறையில் மனிதனை
அடைக்கும் காட்டுமிராண்டித்தனமும்
பிறர் உயிர் பறிக்கும் தினவிய திமிரும்
இரத்தமில்லா உயிர்க்கொலையும்
எமக்கென்ன எனும் மெத்தனமும்
இத்தனையும் உள்ளடக்கிப் பரிணாம வளர்ச்சி பெற்று
சிங்கப்பல் இரண்டு முளைக்காத குறையாய்
கொத்து கொத்தாய் மனிதர்களைக் கொன்று குவித்து
வித விதமாய்க் கிருமிகளை உலவ விட்டு
எச்சில் பருக்கைகள் எனச் சிதறடிக்கப் பட்ட
மனிதநேயத்தைக் கொன்று விட- இன்னும்
ஒரு காலம் வரும் என்றால்
அது மட்டும் வேண்டாம்
No comments:
Post a Comment